Blogroll

ஞாயிறு, 13 மே, 2012

எகிப்திய ஓவியம்

Posted on 12:51 AM by piragasart


எகிப்திய ஓவியம்


பழைய இராஜதானி யுகத்தில் இருந்தே எகிப்தியர்கள் தேவஸ்தானங்களிலும்,சவக்கிடங்குகளிலும்,மாளிகைகளிலும்,சுவர்களிலும் ஓவியங்கள் வரைந்து அலங்கரிப்பதை மரபாகக் கொண்டனர்.

ஓவியங்களின் சிசேஷ பணபுகளாவன

கேத்திர கணித வடிவமைப்புக்களில் வடிவங்களை வரைதல்,சமாந்தர இரேகைகளுக்கு இடையில் வடிவங்களை வரைதல்.பெரும்பாலும் மனித வடிவங்களில் தலையும்,முகமும்,பாதங்களும் பக்கப் பாடாகவும் தோழும் மார்பும் முன்னால் நேராகத் தெரியும் வகையில் இருத்தல்.கண்கள் திறந்து விழித்தவாறும்,உடல் விறைப்புத் தன்மையிம் கொண்டிருத்தல்,முப்பரிமாணம்,தூரநோக்குக் கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்படாமை,குளம்,
நீர் நிலைகள் மேலிருந்து பார்க்கும் வகையில் வரையப்பட்டும் கலை மரபைக் கொண்டவை எகிப்தியக் கலை.

மஞ்சள்,சிவப்பு,பச்சை,நீலம்,வெள்ளை போன்ற வர்ணங்களை தட்டையான அமைப்பில் உபயோகித்தல்,வடிவங்களைச் சுற்றி வெளிக்கோடுகள் கறுப்பு வர்ணத்தால் வரையப்பட்டிருத்தல்,வெளி இரேகைகளை தோணடிக்காட்டுதல் அல்லது சிறு புடைப்பு செதுக்கல்களாக செதுக்கும் பண்புகளைக் கொண்டிருக்கும்.சித்திரங்களின் பின்னணியில் "ஹயிறோக்கிளிபிக்ஸ்"எனப்படும் சித்திர வடிவ எழுத்துக்கள் காணப்படும்.

விவசாயக்காட்சிகள்,வேட்டைக்காட்சி,யுத்தக்காட்சி,ஆபரணம் பாத்திரம் செய்தல்,பூஜைப்பொருள் எடுத்துச் செல்லும் ஊர்வலம்,விருந்து உண்ணும் காட்சி,பப்பிறஸ் இலைகளில் பொருட்கள் செய்யும் காட்சி,எருதுப்போர் என்பன தலைப்புக்களாகக் கொண்டு எகிப்திய மக்களது வாழ்க்கை முறைகளை வெளிப்படுத்துகின்றன.ஆத்மாவின் பிரயாணம்,ஒஸிரிஸ்சை சந்தித்தல்,தீர்ப்புக் கொடுத்தல்,திரும்பியும் மனித உலகத்திற்கு
வருதல் போன்ற தலைப்புடன் கூடிய சித்திரங்களும் முக்கிய இடத்தை பெறுவனவாகும்.

மீடமின் வாத்துக்கள்

கி.மு2500 ற்கு உரியதென கருதப்படும் மீடமின் வாத்துக்கள் எனப்படும் சித்திரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக பிரயாணம் செய்யும் வாத்துக்கள் காணப்படுகின்றன.மிகச்சிறப்பாக இயற்கைத்தன்மையில் வரையப்பட்டு மனங்கவர் முறையில் வர்ணம் தீட்டப்பட்டு உள்ளன.வெள்ளை,கபிலம்,கறுப்பு,சாம்பல்,செம்மஞ்சள் வர்ணங்கள் உபயோகிக்கப்பட்டு உள்ளன.இவ் ஓவியம் மீடம்மில் உள்ள பிரமிட் சுவரில் காணப்படும்.இவ்வோவியம்
உயிர்த்தன்மையுடன் வரையப்பட்டுள்ளதுடன் வெளிக்கோடுகளால் பூரணப்படுத்தப்பட்ட சிறந்த ஆக்கமாகும்.

பறவை வேட்டை

இச்சித்திரம் 18வது அரச பரம்பரையால் வரைவிக்கப்பட்டது.இதில் வள்ளம் ஒன்றில் உயர் பிரபுக்குடும்பம் ஒன்று காணப்படும்.தலைவன் ஓடத்தில் நின்றபடி ஒருகையில் பூமரக்கத்தையும் மறுகையில் வேட்டை ஆடிய பறவைகளை ஏந்திய படியும் காணப்படுகின்றான்.மனைவி மக்கள் சிறிய பிரமாணத்தில் வரையப்பட்டு உள்ளதுடன் இவர்கள் கையில் மலர்களை ஏந்தியபடி காணப்படுகின்றனர்.பப்பிறஸ் புதர்களிடையே பறவைகளை
வேட்டையாடி கைகளிலும் வாயிலும் பறவைகளை ஏந்தியவாறு வேட்டைப்பூனை ஒன்றும் காணப்படும்.சித்திரத்தில் மனித வடிவம் எகிப்திய கலை மரபிலும் பறவைகள் மிகச்சிறப்பாக இயற்கைத்தன்மையிலும் வரையப்பட்டு உள்ளன.பின்னணியில் சித்திர வடிவ எழுத்துக்கள் காணப்படுவதுடன் பப்பிறஸ் மரமும் மலர்களும் காணப்படும்.வர்ணம் சிறப்பாக உபயோகிக்கப்பட்டுள்ளது

No Response to "எகிப்திய ஓவியம்"

Leave A Reply