Blogroll

ஞாயிறு, 13 மே, 2012

ஐரோப்பிய புராதன குகைச்சித்திரங்கம்

Posted on 12:45 AM by piragasart


ஐரோப்பிய புராதன குகைச்சித்திரங்கம்

ஓவியங்களைப்பற்றி ஆராயுமிடத்து முதலில் எடுத்துக்கொள்ளப்படுவது புராதன குகைச்சித்திரங்கள் தொடர்பானவையாகும்.
உலகில் சித்திரக்கலை ஆரம்பித்த காலத்தை உறுதியாக கூறமுடியாவிட்டாலும்,வரலாற்றுக்கு முற்பட்ட கற்குகைகளில் கற்கலை மனிதர்களால் வரையப்பட்ட மிகப்பழமையான ஓவியங்கள் பல ஆய்வுகளின் போது கிடைத்துள்ளன.
சிறந்த சித்திரங்கள் கிழக்கு ஐரோப்பா,வடக்கு ஆபிரிக்காப் பிரதேசத்துக் குகைகளில் இருந்து கிடைத்துள்ளன.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை மூன்று காலங்களாகப் பிரித்து கூறப்படும்.
ஆதி கற்குகைகாலம் கி.மு 40000-20000, மத்திய கற்குகைகாலம் கி.மு 20000-12000, கிட்டிய கற்காலம் கி.மு 12000-5000 வரை உள்ள காலப்பகுதியாகும்.

இதில் முதல் கற்காலப் பகுதியில் இருந்து முக்கியமான ஆக்கம் கிடைக்கப்பெறாவிடினும்,கடினமான யானைத்தந்தத்தில் ஆன ஆயுதங்கள் சில கற்குகைகளுல் இருந்து கிடைத்துள்ளன.
சிறந்த சித்திரங்கள் கிடைக்கப்பெற்ற காலங்களாக மற்றைய இரண்டு கற்காலங்களும் கணிக்கப்படுகின்றன. இவற்றிடையே கூடுதலாக ஓவியங்கள் காணப்படுவது கிட்டிய மத்திய கற்காலத்தில் வரையப்பட்டவைகள் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.
பிரான்சில் சில குகைகளும் ஸ்பானியாவில் சில குகைகளிலும் இச்சித்திரங்கள் கிடைத்துள்ளன.
இச்சித்திரங்கள் மூலம் அக்காலத்து மனிதர்களது கலை இரசனை,கலைத்திறன்,வாழ்க்கை முறைகள் போன்ற பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

வேட்டையாடுவதைத் தொழிலாகக் கொண்டு வாழ்க்கை நடாத்திய கற்குகைவாசிகள் தாம் கண்ட விலங்குகளை,அவற்றின் அங்க அசைவுகளை தாம் வாழ்ந்த குகைச்சுவர்ப்பரப்புகளிலும் முகடுகளிலும் வரைந்து உள்ளனர்.

பெரும்பாலும் கருப்பொருட்களாகக் கொள்ளப்பட்டவை அன்றாடம் அவர்களது ஆகாரத்தின் பொருட்டு உபயோகித்த எருது,மரை,காட்டுப்பன்றி,காண்டாமிருகம்,மாமத்,பைசான்எருது,குதிரை,போன்ற மிருகங்களின் வடிவங்களும்,சில இடங்களில் மனிதர்களில் பல்வேறு செயற்பாட்டுடன் கூடிய உருவ வெளிப்பாடுகளையும் வலரந்து வர்ணம் தீட்டப்பட்டுள்ளன.

சித்திரங்களில் காணப்படும் விலங்குகள் இயற்கை அமைப்பிலும் அவற்றின் உண்மையான பிரமாணத்திலும்,உயிர்த்தன்மையுடனும்,முப்பரிமாண இயல்புடனும்,அவற்றின் அசைவுகளை வெளிக்காட்டும் மெய்நிலைகளிலும் மிகச்சிறப்பாக வரைந்து காணப்படுகின்றன.
கூரிய ஆயுதங்களை உபயோகித்து(கல்,எலும்பு,கொம்பு)புறவடிவை ஆழமாகத்தோண்டி அவற்றில் மிருக இரத்தம்,கொழுப்பு,மண்வகைகள் ஆகியவற்றை உபயோகித்து தயாரித்துக் கொண்ட வர்ணங்களைக் கொண்டு தீட்டப்பட்டுள்ளது. வெள்ளை,கறுப்பு,இருள் மஞ்சள்,சிவப்பு கலந்த கபிலம் போன்ற வர்ணங்கள் உபயோகிக்கப்பட்டு உள்ளன.கைவிரல்கள்,மிருகமயிர் போன்றவற்றை வர்ணம்தீட்ட உபயோகிக்கப்பட்டு உள்ளதுடன் வாயினால் ஊதியும் வர்ணம் பூசப்பட்டு உள்ளது.

கற்குகையில் வாழ்ந்த மக்கள் இவ்வகையான மிருகங்களின் சித்திரங்களை வரைந்ததற்கு உரிய காரணங்கள் தொடர்பாக விமர்சகர்கள்,ஆய்வாளர்கள் பல்தரப்பட்ட கருத்துக்களை வெளியிட்டு உள்ளனர்.ஆதிமனிதன் மூடநம்பிக்கை காரணமாக தாம் வேட்டையாடிய மிருகங்களின் ஆத்மசாந்தியின் பொருட்டு வரைந்து இருக்கலாம் எனவும்,தமது ஓய்வு நேரத்தை அழகியல் இரசனை உணர்வின் மூலம் கழித்து உள்ளனர் எனவும்,
இவ்வாறு பிராணிகளை வரைவதனால் மேலும் பல விலங்குகள் தமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வரைந்து இருக்கலாம் என பல கருத்துக்கள் நிலவுகின்றன.

வடக்கு ஸ்பானியா,வடக்கு ஆபிரிக்கா,பிரான்ஸ்,ஒஸ்றியா,அஸ்ரேலியா போன்ற இடங்களில் உள்ள குகைகளில் இருந்து புராதன கற்குகை ஓவியங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

No Response to "ஐரோப்பிய புராதன குகைச்சித்திரங்கம்"

Leave A Reply