Blogroll

சனி, 9 ஜூன், 2012

கியூபிசம்


இத்தாலிய மறுமலர்ச்சி இயக்கத்துக்குப் பின்னர் உருவான கலை இயக்கங்களுள் மிக முக்கியமானதும், செல்வாக்கு மிக்கதுமான கலை இயக்கம் கியூபிசம் (Cubism) என்று சொல்லலாம். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஐரோப்பாவில், ஓவியம்மற்றும் சிற்பக்கலைத் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியது கியூபிசமேயாகும்.
கியூபிசக் கலை ஆக்கங்களில், பொருட்கள் துண்டுதுண்டாகப் பகுத்தாராயப்பட்டு abstract வடிவில் மீளுருவாக்கம் செய்யப்படுகின்றன. பொருட்களை ஒரு கோணத்தில் பார்த்துக் கலைப் படைப்புக்களில் அவற்றின் ஒரு பகுதியை மட்டும் வெளிப்படுத்துவதற்கு மாறாக, ஒரே சமயத்தில் பொருட்களின் பல கோணப் பார்வைகளை வெளிப்படுத்திப் பொருட்களை முழுமையாகக் காட்டும் முயற்சியே கியூபிசத்தின் அடிப்படை எனலாம். பொதுவாக கியூபிசப் படைப்புக்களில் தளப்பரப்புகள் ஒன்றையொன்று பல்வேறு கோணங்களில் வெட்டுகின்ற தோற்றத்தைக் காணமுடியும். பொருட்களினதும், அவற்றின் பின்னணிகளினதும் தளங்கள் ஒன்றுக்குள் ஒன்று ஊடுருவி அதிக ஆழம் காட்டாத பொருள்மயங்கு நிலையை உருவாக்குவதே கியூபிசத்தின் சிறப்பியல்பு ஆகும்.
பிரான்சின் தலைநகரான பாரிஸில் மொண்ட்மாட்ரே வட்டாரத்தில் வாழ்ந்தஜோர்ஜெஸ் பிராக்கும், பாப்லோ பிக்காசோவும் 1908 ஆம் ஆண்டில் கியூபிசத்தின் வளர்ச்சியை நோக்கிப் பணியாற்றி வந்தனர். 1907 இல் ஒருவரையொருவர் சந்தித்த அவர்கள் 1914 இல் முதலாவது உலக யுத்தம் வெடிக்கும்வரை மிக நெருக்கமாக இணைந்து வேலை செய்து வந்தனர்.
பிரான்சியக் கலை விமர்சகரான லூயிஸ் வௌக்ஸ்செல்ஸ் (Louis Vauxcelles) என்பார் 1908 ஆம் ஆண்டு முதன் முதலாக கியூபிசம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். பிராக் வரைந்த ஓவியமொன்றைப் பார்த்த அவர், அதனை,சிறிய கனக் குற்றிகளினால் நிறைந்துள்ளது என்னும் பொருள்பட 'full of little cubes' என வர்ணித்தார். தொடர்ந்து இவ்வகை ஓவியங்களைக் குறிக்கக் கியூபிசம் என்ற சொல் பரவலாக வழங்கி வந்தது. எனினும் இந்த ஓவியப் பாணியை அறிமுகப் படுத்திய பிராக்கும், பிக்காசோவும் இச்சொல்லைப் பயன்படுத்துவதை நீண்ட காலமாகத் தவிர்த்தே வந்தனர்.
மொண்ட்பார்னசேயில் கூடிய கலைஞர்களில் கூட்டத்தினால் கியூபிச இயக்கம் விரிவடைந்தது. ஹென்றி கான்வெய்லெர் (Henry Kahnweiler) என்னும் கலைப்பொருள் விற்பனையாளரும் கியூபிச இயக்கத்தின் வளர்ச்சியை ஊக்குவித்தார். இது வெகுவிரைவாகச் செல்வாக்குள்ள ஒரு இயக்கமாகியது. 1910 ஆம் ஆண்டிலேயே, பிராக்கினதும், பிக்காசோவினதும் செல்வாக்குக்கு ஆட்பட்ட கலைஞர்களைக் கொண்ட "கியூபிசக் குழுமம்" (cubist school) பற்றி விமர்சகர்கள் குறிப்பிடத் தொடங்கினார்கள். தங்களைக் கியூபிச ஓவியர்கள் என்று கூறிக்கொண்ட பலர், பிராக், பிக்காசோ ஆகியோரின் பாதையிலிருந்து வேறுபட்ட திசையில் சென்று தங்கள் படைப்புக்களை ஆக்கத் தொடங்கினர். 1920க்கு முன்னர், பிராக், பிக்காசோ ஆகியோரின் ஆக்கங்கள்கூடப் பல்வேறு வேறுபாடான கட்டங்களினூடாகச் சென்றிருந்தது.

பாப்லோ பிக்காசோ



பாப்லோ பிக்காசோ (அக்டோபர் 25, 1881 – ஏப்ரல் 8, 1973) எசுப்பானியாநாட்டைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற ஓவியரும், சிற்பியும் ஆவார். 20 ஆம் நூற்றாண்டின் ஓவியத் துறை தொடர்பில் மிகப் பரவலாக அறியப்பட்டவர்களுள் இவரும் ஒருவர். ஜோர்ஜெஸ் பிராக் (Georges Braque) என்பவருடன் கூட்டாக கியூபிசம் என்னும் கலைப்பாணி ஒன்றை ஆரம்பித்து வைத்தவர் என்ற வகையிலேயே இவர் பெரிதும் அறியப்பட்டார்.அமைதிச்சின்னமான புறாவையும்,ஆலிவ் இலைகளையும்பிரபலப் படுத்தியவர் இவரே ஆகும்.
பிக்காசோவின் ஆக்கங்களைப் பல்வேறு காலப்பகுதிகளாகப் பிரித்துக் குறிப்பிடுவது வழக்கம். பிக்காசோவின் பிற்காலப் படைப்புக்கள் தொடர்பான இத்தகைய காலப்பகுதிகள் பற்றிச் சரியான இணக்கம் இல்லாவிட்டாலும், பின்வருவன பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பகுப்புக்களாகும்.
நீலக்காலப்பகுதி (1901-1904), இக்காலத்தைச் சேர்ந்த இவரது ஓவியங்கள் பெரும்பாலும் நீலநிறச் சாயை கொண்டவையாகக் காணப்பட்டன. எசுப்பானியாவில் இவர் மேற்கொண்ட சுற்றுப்பயணம், நண்பரொருவரின்இறப்பு ஆகிய நிகழ்வுகள் இவரது இக்கால ஓவியங்களில் செல்வாக்குச் செலுத்தியதாகக் கூறப்படுகின்றது. கழைக் கூத்தாடிகள், விபச்சாரிகள்,பிச்சைக்காரர்கள், கலைஞர்கள் போன்றவர்கள் இக்காலத்தில் இவர் வரைந்த ஓவியங்களில் பெரும்பாலும் சித்தரிக்கப்பட்டனர்.
ஆப்பிரிக்கச் செல்வாக்குக் காலப்பகுதி (1908-1909), ஆப்பிரிக்கக் கலைப் பொருட்களிலிருந்து கிடைத்த அகத் தூண்டல்களின் அடிப்படையில் உருவான ஓவியங்களே இக்காலப்பகுதியில் இவரது படைப்புக்களில் முதன்மை பெற்றிருந்தன.
பகுப்பாய்வுக் கியூபிசம் (1909-1912), இது பிக்காசோவும், பிராக்கும் இணைந்து உருவாக்கிய ஓவியப் பாணியாகும். இந்த ஓவியங்கள் மண்ணிறத் தன்மை கொண்ட ஒரு நிற ஓவியங்களாக இருந்தன. இவ்வோவியங்களில் கருவாக அமைந்த பொருட்களை வடிவங்களின் அடிப்படையில் பிரித்தெடுத்து வரையும் பரிசோதனைகளாக அமைந்திருந்தன. இக்காலப் பகுதியில் இவ்விரு ஓவியர்களினதும் ஓவியங்கள் ஒன்றுபோலவே அமைந்திருந்தன.


செவ்வாய், 15 மே, 2012

வின்செண்ட் வான் கோ



euorope artist
"கலைகளிலே அவள் ஓவியம்" என்றார் கண்ணதாசன். "கலைகளிலே அவள் ஓவியம்" என்றார் கண்ணதாசன். அழகியல் மட்டுமின்றி, உணர்வியலகாவும் உள்ளதால்தான் ஓவியம் என அதன் உண்ணதத்தை கவிதையில் படைத்தாரோ நம் கவிஞர். அது போல் , ஓவியத்திலேயே புதுக்கவிதைகள் படைத்து இந்த உலக்த்தை உலுக்கியவர் தான் வின்செண்ட் வான் கோ ( 1853-1890). இந்த டச்சு (நெதர்லாந்த்) நாட்டவரின் கலைவடிவங்களை , டச்சு தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் வின்செண்ட் வான் கோ ஓவிய அருங்காட்சியகம் பெருமையுடன் தாங்கி வருகிறது.


ஓவியம் என்பது காட்சியை அச்சு பிசகாமல் நகல் எடுக்கும் கலையாக மட்டும் இருந்த காலத்தில் , ஓவியரின் திறமை என்பது ஓவியத்தின் தத்ரூபத்தில் மட்டும் மதிப்பிடப்பட்ட காலத்தில் ஒவியரை ஒரு படைப்பாளியாக காட்ட வித்திட்ட முதல் முயற்சி இது.காட்சியின் நகலாக ஒரு பரிமாணத்தை மட்டும் ஓவியம் காட்டாமல் , காண்பவரின் கற்பனையில் ஆயிரம் கதைகள் சொல்லும் ஒரு படைப்பாக அதை மாற்ற , காட்சியின் வரைவை சிறிதே திரித்து , கருப் பொருளின் வீர்யத்தை உணர்வாக வெளிப்படுத்தும் அவரின் முயற்சிகள்.


அவரின் ஓவியங்களில் காணப்படும் தூக்கலான வண்ணங்களும், அநாயசமான தூரிகை வீச்சும் ஒரு புதிய ஓவிய உலகிற்கு வழி வகுத்தது எனலாம்.வசீகர புன்னைகையோ, புரியாத புதிரோ இல்லை.அன்றாடம் காணும் காட்சிகள் தான், ஆனால் கார்பன் காப்பியாக இல்லாமல் , வண்ணங்களின் கலவையும் , தூரிகையின் வீச்சும் மனசோடு சொல்லும் கதைகள் ஆயிரம். வாயில்லா ஜீவன்களின் வார்த்தைகள் தான் வண்ணங்களோ?. 


இவரின் ஆரம்ப கால ஓவியங்கள் , இயற்கையின் மீதிருந்த இவரின் ஈடுபாட்டை வெளிப்படுத்தும். இவரின் சகோதரர் தியோவின் ஆதரவோடு , பாரீஸ் சென்றபின் அங்கிருந்த திறமை மிகுந்த ஓவியர்களின் நட்பு இவரின் ஓவிய அணுகுமுறையை மாற்றியது. ஜப்பானிய ஓவியங்களும் இவரை மிகவும் கவர்ந்தது.இவை இரண்டும் வேர்ந்து வான் கோவின் தூரிகையில் , ஒரு புதிய ஓவிய உலகிற்கு பாதையிட்டன.வான் கோவின் வண்ணங்கள் அவரின் உணர்வுகளை பிரதிபலித்தன.நிறங்கள் உணர்வுகளின் ஊடகம் என்ற இவரின் அணுகுமுறை, புதுவகையான சாயங்களை உபயோகிக்கும் முறைகளையும், வரைந்தது போல் வர்ணம் தீட்டும் தூரிகை கெட்டியான வீச்சுகளையும்,தூக்கலான நிறங்களை பயன்படுத்தும் முறையையும் அறிமுகப்படுத்தியது.அவரது சகோதரர் தியோவின் ஆதரவும் நட்பும் அவர்களின் கடிதங்களும் கண் கலங்க செய்தது.


காவியம் எழுதும் போது ஏற்படும் பிழைகளுக்காக தனது தலையால் எழுத்தாணியால் குத்திக் கொண்ட சீ(ழ்)த்தலைசாத்தனார் போல , கோபத்தில் தன் காதையே நறுக்கிக் கொண்டவர் தான் வான் கோ.உலகமெங்கும் உன்னத 
கலைஞர்களின் வாழ்க்கை ஒரே மாதிரிதான் போலும்.வறுமை,விரக்தி,எதிர்ப்பு , பைத்தியகாரப் பட்டம், உலகத்தை உலுக்கிவிடும் மனோபலம், வாழும் போது கிட்டாப் புகழ்,இளம் வயதில் அகால மரணம். 


200கும் மேற்பட்ட ஓவியங்கள மற்றும் கடிதங்கள் அவரின் வாழ்க்கையின் ஐந்து பகுதிகளாக அவர் வாழ்ந்த இடங்களின் காலகட்டமாக காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளது.நெதர்லாந்த்(Netherland),பாரீஸ்(Paris),ஆர்ல் (Arles), சென்ரேமி(Saint-Rémy),ஒவெர்சுர்வஸ்(Auvers-sur-Oise)


ஆரம்ப காலத்தில் தனது உறவினர் ஆண்டனிடம் (Anton Mauve) ஓவியம் வரைய கற்றுக் கொண்டாலும் , பின்னர் ஏகலைவன் போல் தானே படம் வரையக் கற்றுக் கொண்டு வரைந்த பண்ணை காட்சிகளும், விவசாயிகளின் படங்களும் "நெதர்லாந்த்" பகுதியில் நிறைந்திருக்கிறது.இந்த காலகட்ட ஓவியங்கள் , கறுமையான வண்ணங்களை கொண்டிருப்பதை காணலாம்.இதை பூமியின் நிறமெனலாம். 40க்கும் மேற்பட்ட விவசாய காட்சிகள், பண்ணை ஆட்கள் ஒவியம், சிகரெட் பிடிக்கும் எலும்புக் கூடு ஓவியங்கள் அற்புதமானது. ஒரு விவசாய குடும்பம் இரவு உணவு அருந்தும் காட்சியில் அமைந்த்த உருளைக்கிழங்கு உண்பவர்கள் என்ற தலைப்பிலிட்ட ஓவியம் பிரபலமானது.


பின்னர் பாரிஸ் சென்று , அவரது சகோதரர் தியோவுடன் இருந்து ,பிரென்சு ஓவிய கல்லூரியில் சிறிது காலம் ஓவியம் பயின்று வரைந்த படங்கள் "பாரீஸ்" பகுதியில் உள்ளது.இந்த காலகட்டத்தில் தான் அவரது புகழ்பெற்ற ஓவிய பாணி ஆரம்பமானது. பிரகாசமான பிண்ணனிகளையும்,நகர்புற காட்சிகளையும் கொண்ட படங்கள் , வண்ணங்களின் விளையாட்டுகளில் உயிரோட்டமாய் உள்ளன.பாரிஸில் தான் தனி நபர்களின் ஓவியங்களை வரைவதன் மூலம் வருமானம் ஈட்டமுடியும் என்று தோன்றியதால் , தனி நபர் ஓவியங்களை வரைய பயிற்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார்.மாதிரியாக மற்றவர்களை அமர்த்திக் கொள்ள நிதிநிலைமை இடம் கொடாததால் , கண்ணாடி முன் அமர்ந்து கொண்டு தன்னையே வெவ்வேறு பாணிகளில் வரைந்து பழகிய படங்கள் , வான் கோ என்ற கலைஞனின் கனவை தினம் சொல்கின்றன. காலத்தின் சாட்சியாக, தனது தோற்றத்தின் ஞாபகமாக , சுவரை அலங்கரிக்க தன்னை அசலாக படமாக வரைந்து வைத்து கொள்ள எத்தனிக்கும் மனிதரிடம், தனது மனத்தின் படமாக இவற்றை வரைந்துள்ளார்.


சக ஓவியர்களை ஒன்று சேர்த்து ஓவிய கூடம் அமைப்பது அவரது கனவாக இருந்தது. அதற்காக தென் பிரான்ஸில் உள்ள ஆர்ல் பிரதேசத்தில் , மஞ்சள் இல்லம் எனும் ஓவியக் கூடத்தை வாடகைக்கு எடுத்த அவரின் முயற்சிகளின் நினைவுபடுத்தும் படங்கள் , "ஆர்ல்" பகுதியில் உள்ளது. இங்குதான் உலக் புகழ் பெற்ற சூரிய காந்தி படங்கள் உள்ளது. மஞ்சள் நிறத்தின் மேலிருந்த அவரது காதல் , அவரது அனைத்து படங்களிலும் காண முடியும். நண்பர் கோகெனுடன் (Gauguin) கொண்ட கருத்து வேறுபாட்டில் தனது காதை அறுத்தெரிந்ததும் இங்கு தான்.


ஓவியக் கூடம் அமைக்கும் முயற்சியில் தோல்வி,நண்பருடன் கருத்து வேறுபாடு என் விரக்தியில் வாழ்க்கையின் ஓரத்திற்கு விரட்டப்பட ,வான் கோ சென்ரேமி மனநல மருத்துவமனையில் தன்னை சேர்த்துக் கொண்டார். வெளி உலகில் இருப்பதை விட , இங்கு அமைதியாக இருப்பதாக உணர்ந்ததாக தியோவிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கிறார். தனது அறை சன்னலின் வழியாக தெரிந்த மரங்களையும், பூக்களையும்,பரந்தவெளிகளையும் , கோதுமை விளைநிலங்களையும், சைப்ரஸ் மரங்களையும் கண்டு வரைந்த படங்கள் "சென்ரேமி" பகுதியில் உள்ளது. காட்டின் பசுமையில் ஊடுரும் ஒளிக்கதிர்கள் பிரதிபலிக்கும் நிறங்களின் கலவை கண்களின் கனவுலகம்.மற்ற ஓவியர்களின் கருப்பு வெள்ளை வரைபடங்களை மாதிரியாகக் கொண்டு வரைந்த வண்ண ஒவியங்கள் பலவும் உண்டு.


நகர்புர வாழ்க்கையை விரும்பாத , அதே சமயம் சகோதரர் தியோவின் அருகாமையில் இருக்க் விரும்பிய வான் கோ, பாரிஸ்க்கு அருகில் உள்ள ஒவெர்சுர்வஸில் மருத்துவர் பாலின் (Paul Gachet) கண்காணிப்பில் இருந்த போது வரைந்த கிராமப்புற தோற்றங்கள் , "ஒவெர்சுர்வஸ்" பகுதியில் உள்ளது.வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆரோக்கியத்தையும்,ஊக்கத்தையும் இந்த காட்சிகள் அளிப்பதாக வான் கோவின் கடிதங்கள் விவரிக்கின்றன.


1890-ல் விரக்தியின் உச்சத்தில் அவர் ஒரு கோதுமை விளைநிலத்தில் தன்னை சுட்டுக் கொண்டார். இறுதியில் , அவரது சவப்பெட்டியை அலங்கரித்ததும் மஞ்சள்
 ஒரு நாள் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்த போது , வழக்கம் போல ஏதாவது ஒரு சுற்றுலா பேருந்தில் ஏறி முக்கிய தலங்கள் அனைத்தின் முன்பும் புகைப்படம் எடுத்து சுற்றிப் பார்த்த இடங்களின் எண்ணிக்கையில் ஒன்றை சேர்த்த திருப்தி அடையலாம் என்றிருந்த போது , உடன் வந்த ரஷ்ய நண்பர் டிமிட்ரி நேரே வான் கோ ஓவிய அருங்காட்சியகம் செல்லலாம் என்றார். இது ஓவியர்களின் புனித தலம், அறிவு கோயில் என்றும் காணக் கிடைக்காத வான் கோவின் ஓவியங்கள் பல இங்கு உள்ளது என்று அழைத்துச் சென்றார்.


விமான நிலையத்திலிருந்து 20 நிமிட ரயில் பயணத்தில் சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்தோம். மழை லேசாக தூற ஆரம்பிக்கவே, குடை ஒன்றையும்,வரைபடம் ஒன்றையும் வாங்கி கொண்டு, காபியை சிப்பினோம். மோனலிசா வகை ஓவியங்களா ,இல்லை தலையை பிய்க்க வைக்கின்ற நவீன ஓவியங்களா என்று நண்பரின் ஓவிய திறமையே சோதித்தேன். இரண்டும் இல்லை, இது சாமன்யர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கருத்தோவியங்கள் என்றார். காபியை முடித்து, காபியுடன் வந்த சாக்லேட்டை கடித்து ( சாப்பிட்டவுடன் வெற்றிலை மாதிரி , காபியுடன் சாக்கலேட்) ,ட்ராம் ஒன்றை பிடித்து வான் கோவை வந்தடைந்தோம்.


10 யுரோ செலுத்தி உள்ளே சென்றால், உடன் கொண்டு வந்த பொருட்களை ( காமிரா உட்பட) லாக்கரில் போட்டு விட்டுதான் நிரந்தர காட்சிக் கூடத்திற்குள் செல்ல அனுமதித்தார்கள்.நிரந்தர காட்சிக் கூடம் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. முதாலவது வான் கோவின் ஓவியங்கள். இரண்டாவது மற்ற கலைஞர்களின் ( அவரது சம காலத்தவர், நண்பர்கள் மற்றும் அவரின் ஓவிய வழி வந்தவர்கள்) ஓவியங்கள். மூன்றாவது வான் கோவின் ஓவிய வரலாற்றை பிரதிபலிக்கும் கடிதங்கள் மற்றும் பொருட்கள்.

ஓவியர் எடுவார்ட் மனே


oviyam
எடுவார்ட் மனே 21.1.1832ஆம் நாள் [[பாரிஸ்|பாரீசில்]] சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெற்ற ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார். அவரது தாயார் யுஜேனி-டெஸிரே ஃபுர்னியர் ஸ்வீடன் நாட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷார்லஸ் பெர்னாதோத் என்பவரின் மகள் ஆவார். அவரது தந்தையார் அகஸ்த் மனே ஒரு பிரஞ்சு  நீதிபதி.

ஆகவே, அவர் தம் மகன் எடுவார்ட் மனே [[சட்டம்|சட்டத்]] துறையில் பணிபுரிய வேண்டும் என்று எதிர்பார்த்தார். அவரது மாமன் ஷார்லஸ் ஃபுர்னியர் அவர் ஓவியம் பயிலுவதற்கு ஊக்கம் அளித்தார்
. அவர் அவரை லூவ்ருக்கு (Louvre) அழைத்துச் செல்வார். 1841ஆம் ஆண்டு அவரை காலேஸ் ரோலின் இடைநிலைப் பள்ளியில் சேர்த்தனர். 1845ஆம் ஆண்டு அவரது மாமனின் யோசனையின்படி ஒரு ஓவிய சிறப்பு வகுப்பில் சேர்ந்தார். அவ்விடத்தில்தான், தமது நீண்டகால வாழ்நாள் நண்பரும், பிற்காலத்தில் நுண்கலை அமைச்சராகவும் இருந்த அந்தோனின் புரூஸ்த்தை சந்தித்தார். 1848ஆம் ஆண்டு அவர்தம் தந்தையின் யோசனைப்படி, அவர் பயிற்சிக் கப்பலில் ரியோ டி ஜெனய்ரோ சென்றார். அவர் கடற்படையில் சேருவதற்கான தேர்வில் இரண்டு முறை தோல்வியுற்றார். எனவே, அவரது தந்தையார் எடுவார்ட் மனேவின் விருப்பப்படி ஓவியக் கல்வி கற்க விட்டுவிட்டார். 1850-56 வரை தாமஸ் கூதூய்ர் என்ற ஓவிய ஆசிரியரிடம் ஓவியம் கற்றார். 

ஓய்வுநேரத்தில் லூவ்ருவில் உள்ள முன்னாள் ஓவிய ஆசிரியர்களின் ஓவியத்தைப் பார்த்து வரைந்தார். [[1853]]-[[1856|56]] வரை [[செருமனி]], [[இத்தாலி]], [[நெதர்லாந்து]] ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, டச்சு ஓவியரான பிரான்ஸ் ஹால்ஸ், ஸ்பானிய ஓவியர்களான திகோ வேலாஸ்குயிஸ், பிரான்ஸிஸ்கோ ஜோஸி டி கோயா ஆகியோரின் ஓவியங்களை உன்னிப்பாக கவனித்து வந்தார். 1856-இல் மனே தமது சொந்த ஓவியக் கூடத்தைத் தொடங்கினார். இக்காலகட்டத்தில், தளர்ச்சியான தூரிகையைக் கொண்டு எளிய நடையில் ஓவியங்களைத் தீட்டினார். குஸ்தாவ் குர்பெத் என்ற ஓவியரின் அப்போதைய யதார்த்தப் பாணி ஓவியத்தை மனே பின்பற்றினார்.

 அவர் The Absinthe Drinker (1858–59) என்ற ஓவியத்தை தீட்டினார். அத்துடன் பிச்சைக்காரர்கள், பாடகர்கள், நாடோடிகள், உணவுவிடுதியில் மக்கள், காளைமாட்டுச் சண்டை போன்ற ஓவியங்களையும் அவர் தீட்டினார். அவர்தம் தொடக்க காலத்தில், மதம், புராணம், வரலாறு சம்பந்தப்பட்ட ஓவியங்களை அவ்வளவாக தீட்டவில்லை எனலாம். உதாரணம், தற்போது சிகாகோ, ஆர்ட் இன்ஸ்டிடியுட்டில் உள்ள ''கிறிஸ்ட் மாக்ட்'' என்ற ஓவியம், நியுயார்க், மெட்ரோபாலிடன் மியுசியம் ஆஃப் ஆர்ட்டில் உள்ள ''கிறிஸ்ட் வித் ஏஞ்சல்ஸ்'' ஆகியவற்றை மட்டும் உதாரணமாகச் சொல்லலாம்

ஓவியர் பாப்லோ பிக்காசோ


artist,art,eourope
 பிக்காசோ (அக்டோபர் 25, 1881 – ஏப்ரல் 8, 1973) எசுப்பானியாநாட்டைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற ஓவியரும், சிற்பியும் ஆவார். 20 ஆம் நூற்றாண்டின் ஓவியத் துறை தொடர்பில் மிகப் பரவலாக அறியப்பட்டவர்களுள் இவரும் ஒருவர். ஜோர்ஜெஸ் பிராக் (Georges Braque) என்பவருடன் கூட்டாககியூபிசம் என்னும் கலைப்பாணி ஒன்றை ஆரம்பித்து வைத்தவர் என்ற வகையிலேயே இவர் பெரிதும் புறாவையும்,ஆலிவ் இலைகளையும் பிரபலப் படுத்தியவர் இவரே ஆகும்
அறியப்பட்டார்.அமைதிச்சின்னமான


பிக்காசோவின் ஆக்கங்களைப் பல்வேறு காலப்பகுதிகளாகப் பிரித்துக் குறிப்பிடுவது வழக்கம். பிக்காசோவின் பிற்காலப் படைப்புக்கள் தொடர்பான இத்தகைய காலப்பகுதிகள் பற்றிச் சரியான இணக்கம் இல்லாவிட்டாலும், பின்வருவன பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பகுப்புக்களாகும்.
நீலக்காலப்பகுதி (1901-1904), இக்காலத்தைச் சேர்ந்த இவரது ஓவியங்கள் பெரும்பாலும் நீலநிறச் சாயை கொண்டவையாகக் காணப்பட்டன. எசுப்பானியாவில் இவர் மேற்கொண்ட சுற்றுப்பயணம், நண்பரொருவரின் இறப்புஆகிய நிகழ்வுகள் இவரது இக்கால ஓவியங்களில் செல்வாக்குச் செலுத்தியதாகக் கூறப்படுகின்றது. கழைக் கூத்தாடிகள், விபச்சாரிகள்,பிச்சைக்காரர்கள், கலைஞர்கள் போன்றவர்கள் இக்காலத்தில் இவர் வரைந்த ஓவியங்களில் பெரும்பாலும் சித்தரிக்கப்பட்டனர்.


 செல்வாக்குக் காலப்பகுதி (1908-1909), ஆப்பிரிக்கக் கலைப் பொருட்களிலிருந்து கிடைத்த அகத் தூண்டல்களின் அடிப்படையில் உருவான ஓவியங்களே இக்காலப்பகுதியில் இவரது படைப்புக்களில் முதன்மை பெற்றிருந்தன.
பகுப்பாய்வுக் கியூபிசம் (1909-1912), இது பிக்காசோவும், பிராக்கும் இணைந்து உருவாக்கிய ஓவியப் பாணியாகும். இந்த ஓவியங்கள் மண்ணிறத் தன்மை கொண்ட ஒரு நிற ஓவியங்களாக இருந்தன. இவ்வோவியங்களில் கருவாக அமைந்த பொருட்களை வடிவங்களின் அடிப்படையில் பிரித்தெடுத்து வரையும் பரிசோதனைகளாக அமைந்திருந்தன. இக்காலப் பகுதியில் இவ்விரு ஓவியர்களினதும் ஓவியங்கள் ஒன்றுபோலவே அமைந்திருந்தன.


1881 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் திகதி, எசுப்பானியா (ஸ்பெயின்) நாட்டிலுள்ள மலகா (Málaga) என்னுமிடத்தில், பெற்றோருக்கு முதல் பிள்ளையாகப் பிறந்தார்

மைக்கலாஞ்சலோ


மைக்கலாஞ்சலோ

இவர் நான்கு உயிர்கள் கொண்ட ஓர் ஒப்பற்ற கலைஞனாக வருணிக்கிறது வரலாறு. கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, கவிதைக்கலை ஆகிய நான்கு துறைகளுக்கு அவர் புத்துயிர் ஊட்டியதால்தான் அந்த வர்ணனை. அவர் வேறு யாருமல்ல  'Renaissance' எனப்படும் ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் ஓவியத்திற்கும், சிற்பத்திற்கும் உண்மையான மறுமலர்ச்சியைக் கொண்டு வந்த மாபெரும் கலைஞன் மைக்கலாஞ்சலோ.



மைக்கலாஞ்சலோ புவோனரோட்டி 1475-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் நாள் இத்தாலியின் Caprese என்ற நகரில் பிறந்தார். அவர் பிறந்த சமயம் அவரது குடும்பம் ஏழ்மையில் உழன்று கொண்டிருந்தது. மைக்கலாஞ்சலோ சிறு வயதாக இருந்தபோது ஒரு கல்வெட்டியின் வீட்டில் அவரது கண்கானிப்பில் விடப்பட்டார். அப்போதிருந்தே உளியையும், சுத்தியலையும் கையாளத் தொடங்கினார் மைக்கலாஞ்சலோ. சிறுவயதிலிருந்தே அவருக்கு ஓவியத்தின் மீது அலாதி பிரியம் இருந்தது. தந்தையும், மாமன்களும் அவரது கவனத்தை திசை திருப்ப முயன்று தோற்றுப் போயினர்.

ஓவியக்கலையைக் கற்றுகொள்ள அவர் அப்போது புகழ்பெற்றிருந்த 'Domenico Ghirlandaio' என்பவரிடம் மாணவராக சேர்ந்தார். மைக்கலாஞ்சலோவின் திறமையைப் பார்த்து அந்த ஆசிரியரே பொறாமைப்பட்டதாக ஒரு வரலாற்று குறிப்பு கூறுகிறது. மீன் சந்தைக்கு அடிக்கடி சென்று மீன்களின் கண்கள், செவுல்கள் ஆகியவற்றை கூர்ந்து கவனித்து பின்னர் அவற்றை தத்ரூபமாக வரைவாராம் மைக்கலாஞ்சலோ. பின்னர் 'Lorenzo de' Medici' என்பவரிடம் சிற்பக்கலையை கற்றுக்கொள்ள விரும்பினார் மைக்கலாஞ்சலோ.

ஒருமுறை பளிங்கு கல்லில் ஒரு முதியவர் சிரிப்பதைப்போன்ற சிற்பத்தை வடித்து அதற்கு மெருகேற்றிக்கொண்டிருந்தார் மைக்கலாஞ்சலோ. அதனைப் பார்த்த லொரான்ஸோ கிண்டலாக முதியவருக்கு எல்லாப் பற்களும் இருக்கின்றனவே என்று கேட்க சற்றும் தயங்காமல் உளியையும், சுத்தியலையும் எடுத்து மேல் வரிசையில் இருந்த பல்லை ஒருசில நிமிடங்களில் உடைத்தெடுத்தாராம். அந்த லாவகத்தைக் கண்டு அதிசயித்துப்போன லொரான்ஸோ மைக்கலாஞ்சலோவின் தந்தையின் அனுமதி பெற்று அவரை தன் சொந்த வீட்டிலேயே வைத்துக்கொண்டார். 1492-ஆம் ஆண்டு லொரான்ஸோ இறக்கும் வரை அவர்கூடவே இருந்து தனது சிற்பக்கலையை வளர்த்துக்கொண்டார் மைக்கலாஞ்சலோ.

Lorenzo di Pierfrancesco de' Medici என்ற அழகிய பெண்ணை காதலிக்கத் தொடங்கியபோதுதான் அவருக்குள் இருந்த கவிதை ஊற்று பெருக்கெடுக்கத் தொடங்கியது. அவர் பல கவிதைகளை இயற்றினார். 1495-ஆம் ஆண்டில் அவர் 'Sleeping Cupid' என்ற உறங்கும் காமதேவன் சிலையை செதுக்கினார். நான்கு ஆண்டுகள் கழித்து அவர் உருவாக்கிய 'Pieta' சிற்பம் இன்றும் 'Vatican' தேவாலாயத்தை அலங்கரிக்கின்றன. மைக்கலாஞ்சலோவிற்கு பெரும் புகழை சேர்த்த சிற்பம் டேவிட் சிலை. ஓர் உருக்குலைந்து போன பளிங்கு கல்லிருந்து அவர் வார்த்தெடுத்த அற்புத சிற்பம்தான் அந்த டேவிட் சிலை. அந்த சிலையை உருவாக்க அவருக்கு பதினெட்டு மாதங்கள் தேவைப்பட்டன.

1508-ஆம் ஆண்டு அவரது புகழை உலகமெங்கும் பரவச் செய்யப்போகும் ஓர் அழைப்பு வந்தது. அழைப்பு என்பதை விட கட்டளை என்று சொல்லலாம். சிஸ்டீன் தேவாலயம் (Sistine) கட்டப்படத் தொடங்கிய அந்தக் காலகட்டத்தில் அப்போது போப்பாக இருந்த இரண்டாம் ஜூலியஸ் அந்த தேவாலயத்தின் சுவர்களிலும், கூரைகளிலும் பைபிள் காட்சிகளை ஓவியங்களாக தீட்டித்தருமாறு மைக்கலாஞ்சலோவைப் பணித்தார். தான் ஓவியன் அல்ல வெறும் சி்ற்பிதான் என்று மைக்கலாஞ்சலோ எவ்வுளவோ எடுத்துக்கூறியும் போப் நிர்ப்பந்தித்ததால் மிகுந்த தயக்கத்தோடுதான் அவர் அந்த பணியை தொடங்கியதாக வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. 

ஓவியங்கள் வரைய வேண்டிய பரப்பளவு சுமார் பத்தாயிரம் சதுர அடி. ஐந்து உதைவியாளர்களை மட்டுமே வைத்துக்கொண்டு பணியைத் தொடங்கினார் மைக்கலாஞ்சலோ. ஆனால் அவரது முன்கோபத்தை தாளாத உதவியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக விலக தனி மனிதனாக தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. தாமஸ் ஆல்வா எடிசன் அப்போது இல்லை என்பதால் மின் விளக்குகளும் கிடையாது. வெறும் மெழுகுவர்த்தியின் ஒளியில் உணவு, உறக்கம் மறந்து தனது அதீத ஓவியங்களை தேவாலயத்தின் மிக உயரமான உட்கூரைகளில் தீட்டினார் மைக்கலாஞ்சலோ. பல ஓவியங்களை அவர் படுத்துக்கொண்டே தீட்டியதால் தூரிகையிலிருந்து சிதறிய வண்ணங்கள் அவரது கண்களை பதம் பார்த்தன.

ஓவியங்கள் தீட்டும்போது இதுபோன்ற சில இடையூறுகள் ஏற்பட்டாலும் எந்த சிரமமும் பார்க்காமல் இரவு பகலாக உழைத்து நான்கு ஆண்டுகளில் தனது ஓவிய உற்சவத்தை நிறைவு செய்தார் மைக்கலாஞ்சலோ. இன்று தங்களை சிறந்த ஓவியர்கள் என்று சொல்லிக்கொள்ள விரும்பும் எவரும் முதலில் தரிசிக்க வேண்டிய காட்சிக்கூடமாக திகழ்கிறது சிஸ்டீன் தேவாலாயம். மைக்கலாஞ்சலோ வரைந்த 'ஆதாமின் பிறப்பு' என்ற ஓவியம் உலக ஓவியர்கள் இன்றும் பார்த்தும் வியக்கும் ஓர் அற்புத காவியம். இறைவனின் விரல் உயிரற்ற ஆதாமின் விரலைத் தீண்ட ஆதாம் உயிர் பெறுவதாக சித்தரிக்கப்பட்டிருக்கும் அந்த ஓவியத்தில் ஆதாமுக்கே அடையாளம் தந்திருக்கிறார் மைக்கலாஞ்சலோ. 

அதேபோன்ற சுமார் 340 ஓவியங்களை சிஸ்டீன் (Sistine) தேவாலயத்தின் சுவர்களிலும், கூரைகளிலும் வடித்து தனது தூரிகையால் ஒரு ஓவிய ராஜாங்கத்தையே நடத்தி முடித்தார் மைக்கலாஞ்சலோ. அவருக்கு 60 வயதானபோது மைக்கலாஞ்சலோவை வத்திகனின் அரசவை கட்டடக்கலை நிபுனராகவும், சிற்பியாகவும் ஓவியராகவும் நியமித்தார் மூன்றாம் போப். அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்ட மைக்கலாஞ்சலோவின் தூரிகை அடுத்த ஏழு ஆண்டுகளில் தீட்டிக்கொடுத்த ஓர் அற்புத ஓவியம்தான் The Last Judgment. அவருடைய நெருங்கிய நண்பரான Ascanio Condivi மைக்கலாஞ்சலோவை வருணிக்கும்போது இவ்வாறு சொல்கிறார். 

“மைக்கலாஞ்சலோ ஒரு ஓவியத்திலோ அல்லது சிற்பம் செதுக்குவதிலோ ஈடுபட்டால் அவரது கவனத்தை எந்த சக்தியாலும் திசை திருப்ப முடியாது. உணவுகூட அவருக்கு இரண்டாம்பட்சம்தான். பலமுறை உடைகளையும், காலணிகளையும் கழற்றாமலேயே உறங்குவார் வேலை செய்வார். அதனால் சில சமயங்களில் அவர் காலுறையை கழற்றும்போது அவரது தோலும் உரிந்து வரும். தான் செய்யும் வேலையின் மீது அவருக்கு அவ்வுளவு ஈடுபாடு இருந்தது”

திருமணம் செய்துகொள்ளாமல் கடைசிவரை தனியாகவே வாழ்ந்த மைக்கலாஞ்சலோவைப் பார்த்து அவரது நண்பர் ஒருமுறை உங்கள் பெயர் சொல்ல உங்களுக்கு ஒரு வாரிசு இல்லையே என்று கவலையோடு கேட்டார். அதற்கு மைக்கலாஞ்சலோ என்ன சொன்னார் தெரியுமா? 

"ஓவியமும் சிற்பமும்தான் எனக்கு வாழ்க்கைப்பட்ட மனைவி, என்னுடைய படைப்புகள்தான் நான் இந்த உலகிற்கு விட்டு செல்லும் எனது குழந்தைகள் அவற்றுக்கு அவ்வுளவாக மதிப்பு இருக்காது என்றாலும் அவற்றில் நான் என்றென்றும் வாழ்வேன்"

மதிப்பு இருக்காது என்று அவர் விட்டுச்சென்ற படைப்புகள் இன்று விலைமதிக்க முடியாதவை. மைக்கலாஞ்சலோவை போன்றவர்களை சந்திக்கும்போதுதான் வரலாறு நெஞ்சு உயர்த்திக்கொள்ள முடிகிறது. அந்த மாபெரும் கலைஞன் 1564-ஆம் ஆண்டு தனது 89-ஆவது அகவையில் இவ்வுலகை விட்டு விடைபெற்றுக்கொண்டபோது இனி இப்படி ஒரு கலைஞனை மீண்டும் எப்போது சந்திக்கப் போகிறோம் என்று எண்ணி அந்த வரலாறும் கண்ணீர் சிந்தியிருக்க வேண்டும். அவ்வுளவு திறமைகளையும் வைத்துக்கொண்டு சோம்பித் திரிந்திருந்தால் மைக்கலாஞ்சலோ மக்கள் தொகையில் ஒரு புள்ளி விபரமாகவே இருந்திருப்பார். 

அவரது வாழ்க்கை நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம் மிக எளிதான ஒன்றுதான். அவருக்கு வானம் வசப்பட்டதற்கான முக்கிய காரணம் அவர் தேர்ந்தெடுத்த பணியில் காட்டிய ஈடுபாடு, விடாமுயற்சி, பயபக்தியுடன் கூடிய கடின உழைப்பும்தான். மைக்கலாஞ்சலோவைப்போல் நாம் ஊண் உறக்கம் மறந்து காரியங்களில் ஈடுபடத் தேவையில்லை. நாம் செய்யும் எந்த ஒரு வேலையிலும் நூறு சதவீத ஈடுபாடும், விடாமுயற்சியுன் கூடிய கடின உழைப்பும் இருந்தால் போதும் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படும்.

ஞாயிறு, 13 மே, 2012

எகிப்திய ஓவியம்


எகிப்திய ஓவியம்


பழைய இராஜதானி யுகத்தில் இருந்தே எகிப்தியர்கள் தேவஸ்தானங்களிலும்,சவக்கிடங்குகளிலும்,மாளிகைகளிலும்,சுவர்களிலும் ஓவியங்கள் வரைந்து அலங்கரிப்பதை மரபாகக் கொண்டனர்.

ஓவியங்களின் சிசேஷ பணபுகளாவன

கேத்திர கணித வடிவமைப்புக்களில் வடிவங்களை வரைதல்,சமாந்தர இரேகைகளுக்கு இடையில் வடிவங்களை வரைதல்.பெரும்பாலும் மனித வடிவங்களில் தலையும்,முகமும்,பாதங்களும் பக்கப் பாடாகவும் தோழும் மார்பும் முன்னால் நேராகத் தெரியும் வகையில் இருத்தல்.கண்கள் திறந்து விழித்தவாறும்,உடல் விறைப்புத் தன்மையிம் கொண்டிருத்தல்,முப்பரிமாணம்,தூரநோக்குக் கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்படாமை,குளம்,
நீர் நிலைகள் மேலிருந்து பார்க்கும் வகையில் வரையப்பட்டும் கலை மரபைக் கொண்டவை எகிப்தியக் கலை.

மஞ்சள்,சிவப்பு,பச்சை,நீலம்,வெள்ளை போன்ற வர்ணங்களை தட்டையான அமைப்பில் உபயோகித்தல்,வடிவங்களைச் சுற்றி வெளிக்கோடுகள் கறுப்பு வர்ணத்தால் வரையப்பட்டிருத்தல்,வெளி இரேகைகளை தோணடிக்காட்டுதல் அல்லது சிறு புடைப்பு செதுக்கல்களாக செதுக்கும் பண்புகளைக் கொண்டிருக்கும்.சித்திரங்களின் பின்னணியில் "ஹயிறோக்கிளிபிக்ஸ்"எனப்படும் சித்திர வடிவ எழுத்துக்கள் காணப்படும்.

விவசாயக்காட்சிகள்,வேட்டைக்காட்சி,யுத்தக்காட்சி,ஆபரணம் பாத்திரம் செய்தல்,பூஜைப்பொருள் எடுத்துச் செல்லும் ஊர்வலம்,விருந்து உண்ணும் காட்சி,பப்பிறஸ் இலைகளில் பொருட்கள் செய்யும் காட்சி,எருதுப்போர் என்பன தலைப்புக்களாகக் கொண்டு எகிப்திய மக்களது வாழ்க்கை முறைகளை வெளிப்படுத்துகின்றன.ஆத்மாவின் பிரயாணம்,ஒஸிரிஸ்சை சந்தித்தல்,தீர்ப்புக் கொடுத்தல்,திரும்பியும் மனித உலகத்திற்கு
வருதல் போன்ற தலைப்புடன் கூடிய சித்திரங்களும் முக்கிய இடத்தை பெறுவனவாகும்.

மீடமின் வாத்துக்கள்

கி.மு2500 ற்கு உரியதென கருதப்படும் மீடமின் வாத்துக்கள் எனப்படும் சித்திரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக பிரயாணம் செய்யும் வாத்துக்கள் காணப்படுகின்றன.மிகச்சிறப்பாக இயற்கைத்தன்மையில் வரையப்பட்டு மனங்கவர் முறையில் வர்ணம் தீட்டப்பட்டு உள்ளன.வெள்ளை,கபிலம்,கறுப்பு,சாம்பல்,செம்மஞ்சள் வர்ணங்கள் உபயோகிக்கப்பட்டு உள்ளன.இவ் ஓவியம் மீடம்மில் உள்ள பிரமிட் சுவரில் காணப்படும்.இவ்வோவியம்
உயிர்த்தன்மையுடன் வரையப்பட்டுள்ளதுடன் வெளிக்கோடுகளால் பூரணப்படுத்தப்பட்ட சிறந்த ஆக்கமாகும்.

பறவை வேட்டை

இச்சித்திரம் 18வது அரச பரம்பரையால் வரைவிக்கப்பட்டது.இதில் வள்ளம் ஒன்றில் உயர் பிரபுக்குடும்பம் ஒன்று காணப்படும்.தலைவன் ஓடத்தில் நின்றபடி ஒருகையில் பூமரக்கத்தையும் மறுகையில் வேட்டை ஆடிய பறவைகளை ஏந்திய படியும் காணப்படுகின்றான்.மனைவி மக்கள் சிறிய பிரமாணத்தில் வரையப்பட்டு உள்ளதுடன் இவர்கள் கையில் மலர்களை ஏந்தியபடி காணப்படுகின்றனர்.பப்பிறஸ் புதர்களிடையே பறவைகளை
வேட்டையாடி கைகளிலும் வாயிலும் பறவைகளை ஏந்தியவாறு வேட்டைப்பூனை ஒன்றும் காணப்படும்.சித்திரத்தில் மனித வடிவம் எகிப்திய கலை மரபிலும் பறவைகள் மிகச்சிறப்பாக இயற்கைத்தன்மையிலும் வரையப்பட்டு உள்ளன.பின்னணியில் சித்திர வடிவ எழுத்துக்கள் காணப்படுவதுடன் பப்பிறஸ் மரமும் மலர்களும் காணப்படும்.வர்ணம் சிறப்பாக உபயோகிக்கப்பட்டுள்ளது

ஸ்பானியாவில் பின்டால் குகை


ஸ்பானியாவில் பின்டால் குகை

புராதன குகைக் காலத்து மனிதர் பிராணிகளின் சகல அங்கங்கள் தொடர்பாகவும் மிகக் கவனம் செலுத்தி உள்ளனர் என்பதற்கு இங்கு உள்ள சித்திரம் ஒன்று உதாரணமாகும்.யானை ஒன்றை வரைந்து அப்பிராணியின் இதயம் உள்ள இடத்தைக் குறிப்பிட்டு உள்ளது சிறப்பம்சமாகும்.

வடக்கு ஸ்பானியாவில் உள்ள கோகுல் குகை


வடக்கு ஸ்பானியாவில் உள்ள கோகுல் குகை

இங்கு மிகப் பழமையான ஓவியங்கள் கிடைத்துள்ளன.இங்கு காணப்படும் பிராணிகளின் வடிவங்களிலும் பார்க்க முக்கியத்துவம் பெறும் சித்திரம்,நிர்வாணமாக நிற்கும் இளைஞனைச் சுற்றி நடனம் ஆடும் பெண்களின் வடிவங்களைக் கொண்ட சித்திரங்களாகும்.

பிரான்சில் பொண்டி டு கோமே குகை


பிரான்சில் பொண்டி டு கோமே குகை

பிரான்சில் தோர்தோன் எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள புராதன வரலாற்றுக் காலத்துக்குரிய பொணடி டுகோமே குகையில் சில சித்திரங்களைக் காணலாம். கறுப்பு இரேகையால் வரையப்பட்ட "மாமத்"எனப்படும் விசாலமான யானை போன்ற வடிவம் விளக்கமாக வரையப்பட்டுள்ளது. மேல் நோக்கி வளைந்து நீண்டு காணப்படும் தந்தங்களுடன் சரீரம் முழுவதும் உரோமம் நிறைந்து காணப்படும் வகையில் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
குதிரை,பனிமான் உருவங்களுள் இயற்கையாகப் பிரயாணம் செய்யும் வகையில் வரையப்பட்டுள்ளது.பனடமான் வரையும் போது கொம்புகளுக்கு கடும் வர்ணஇரேகையாலும்,சரீரத்தின் கீழ்ப்பகுதி மென் வர்ணத்தாலும் வரையப்பட்டு உள்ளது.

பிரான்சில் பிரணீஸ் மலைக்கல் சுவர்


பிரான்சில் பிரணீஸ் மலைக்கல் சுவர்

பிரான்சில் உள்ள மலையின் கற்சுவரில் ஓடுகின்ற மரையின் வடிவமும் அதனுன் மரைக்குட்டி ஒன்றும் ஓடுகின்ற காட்சி உள்ளது.இடைவெளிகளை நிரப்புவதற்கு மீன்களின் வடிவம் காணப்படுகின்றன. (தொடரும்)

லஸ்கோ குகை


லஸ்கோ குகை

கி.பி1910 ல் பாடசாலை மாணவர்கள் இருவர் காணாமற் போன தமது நாயைத் தேடிச் சென்ற இடத்து எதிர்பாராமல் கண்டு பிடிக்கப்பட்ட லஸ்கோ குகை பிரான்சில் அமைந்து உள்ளது.இக்குகை புராதன வரலாற்றுச் சித்திரங்கள் கிடைத்துள்ள முக்கியமான இடமாகும்.லாஸ்கோ குகையின் உள்ளே எருதின் வடிவங்களும்,மாடு்,ஆடு,குதிரை,காண்டாமிருகம்,சிங்கம் ஆகிய பிராணிகளின் வடிவங்களும் வரையப்பட்டு உள்ளன.கறுப்பு,மஞ்சள்,கபிலம் போன்ற
வர்ணங்களால் தீட்டப்பட்ட 17அடி நீளம் கொண்ட எருதுகள் சில காணப்படும்.

நீண்ட பிரமாணத்தைக் கொண்ட எருது வரிசைகள் பாய்ந்து செல்லும் தன்மையில் உள்ள இப்பகுதி எருதுகளின் குகை என்னும் பெயரில் புதைபொருள் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

வேகமாக முன்னால் பாயும் பசு ஒன்றின் வடிவம் தத்ரூபமாகவும் சலனத்துடன் கூடிய மெய் நிலையிலும் மிகச் சிறப்பாகக் காணப்படுகிறது.காட்டுப்பன்றி ஒன்றின் புடைப்புச் செதுக்கல் ஒன்றும் காணப்படுகின்றன.இக்குகையில் மரண காயம் அடைந்த பைசன் எருது மனிதனை காயப்படுத்திக் கொன்று போட்டு உள்ள காட்சி ஒன்றும் லாஸ்கோ குகையில் காணப்படுகிறது.
இதில் பைசன் எருதின் முன்னால் விழுந்து கிடக்கும் மனித வடிவம் ஒன்றும் அருகில் வில்லும் அம்பும் உள்ளன. இக்காட்சி மிகச்சிறப்பாக வரையப்பட்டுள்ளது.அக்காலத்து மக்கள் தாம் கண்டவற்றை மனதில் வைத்து வரைந்து உள்ள தன்மை புதுமையான ஒன்றாகும்.

ஸ்பானிய அல்ராமீராக்குகைச் சித்திரங்கள்


ஸ்பானிய அல்ராமீராக்குகைச் சித்திரங்கள்

புராதன வரலாற்றுக் குகைச் சித்திரங்களிடையே வடஸ்பானியாவில் அமைந்துள்ள அல்ராமீராக்குகை ஓவியங்கள் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றன.இக் குகை கி.பி1879 ல் கண்டுபிடிக்கப்பட்டது.இக் குகைக்கு அண்மையில் வாழ்ந்த சன்ராவோல் என்பவர் அப்பிரதேசத்தில் கிடந்த மிருக எலும்புகள்,கல் ஆயுதங்கள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார்.ஒரு நாள் தனது மகளுடன் இக்காட்டில் இருண்டு கிடந்த அல்ராமீராக்குகையின் உள்ளே சென்றார்.
அப்பொழுது இவரது மகள் மாடு,மாடு எனப் பயந்து கத்திய சத்தம் கேட்டு அப்பகுதியை ஆராய்ந்த பொழுது குகைச்சுவர்களில் வரையப்பட்டு இருந்த பல்வகை அமைப்புடைய பைசன்

எருதுகள்,குதிரைகள்,பனிமான் போன்ற விலங்குகளின் வடிவங்கள் பலவற்றைக் கண்டுபிடித்தார்.இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட வடிவம்,அபேவுயில் எனப் பெயர் கொண்ட கலைஞரால் பிரதிசெய்து வெளியிட்ட பின்னரே உலகிற்கு அறிமுகமானது.

அல்ராமீராக்குகையில் ஆதிமனிதனால் வரையப்பட்ட கலைச்சிறப்புடைய இச்சித்திரங்களிடையே பைசன் எருதின் வடிவம் முதல் இடத்தை வகிக்கின்றன.எருதின் இயற்கையான அங்க அசைவுத்தன்மைகள்,முக்காரமிடும்(கத்தும்) தன்மைகளை மிக உன்னிப்பாக அவதானித்து அவர்கள் வரைந்துள்ளனர்.நடன அமைப்பை நி​னைவூட்டு்ம் மெய்நிலையில் முன்னோக்கிப் பாய்வதற்கு ஆயத்தமாகும் எருதின் வடிவம் மிகவும் இயற்கையாகக் காணப்படுகிறது.
இளைப்பாறிக் கொண்டு இருக்கும் பைசன் எருதின் வடிவம்,ஓடுகின்ற எருது,சாதாரண நிலையில் உள்ள எருதின் வடிவங்கள் உயிர் துடிப்புடனும் தத்ரூபமாகவும் வரையப்பட்டு உள்ளன.

மேலும் குதிரைத்தலை,சிவப்பு மான்கள் இரண்டு உயிர்த்தன்மையைக் கொண்டு உள்ளன.இவை சிவப்பு,கறுப்பு,மஞ்சள்,நரை வர்ணங்களால் வர்ணம் தீட்டப்பட்டு  அகழ்ந்து எடுக்கப்பட்ட உறுதியான வெளிக்கோடுகளுடன் காணப்படுகின்றன.

ஐரோப்பிய புராதன குகைச்சித்திரங்கம்


ஐரோப்பிய புராதன குகைச்சித்திரங்கம்

ஓவியங்களைப்பற்றி ஆராயுமிடத்து முதலில் எடுத்துக்கொள்ளப்படுவது புராதன குகைச்சித்திரங்கள் தொடர்பானவையாகும்.
உலகில் சித்திரக்கலை ஆரம்பித்த காலத்தை உறுதியாக கூறமுடியாவிட்டாலும்,வரலாற்றுக்கு முற்பட்ட கற்குகைகளில் கற்கலை மனிதர்களால் வரையப்பட்ட மிகப்பழமையான ஓவியங்கள் பல ஆய்வுகளின் போது கிடைத்துள்ளன.
சிறந்த சித்திரங்கள் கிழக்கு ஐரோப்பா,வடக்கு ஆபிரிக்காப் பிரதேசத்துக் குகைகளில் இருந்து கிடைத்துள்ளன.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை மூன்று காலங்களாகப் பிரித்து கூறப்படும்.
ஆதி கற்குகைகாலம் கி.மு 40000-20000, மத்திய கற்குகைகாலம் கி.மு 20000-12000, கிட்டிய கற்காலம் கி.மு 12000-5000 வரை உள்ள காலப்பகுதியாகும்.

இதில் முதல் கற்காலப் பகுதியில் இருந்து முக்கியமான ஆக்கம் கிடைக்கப்பெறாவிடினும்,கடினமான யானைத்தந்தத்தில் ஆன ஆயுதங்கள் சில கற்குகைகளுல் இருந்து கிடைத்துள்ளன.
சிறந்த சித்திரங்கள் கிடைக்கப்பெற்ற காலங்களாக மற்றைய இரண்டு கற்காலங்களும் கணிக்கப்படுகின்றன. இவற்றிடையே கூடுதலாக ஓவியங்கள் காணப்படுவது கிட்டிய மத்திய கற்காலத்தில் வரையப்பட்டவைகள் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.
பிரான்சில் சில குகைகளும் ஸ்பானியாவில் சில குகைகளிலும் இச்சித்திரங்கள் கிடைத்துள்ளன.
இச்சித்திரங்கள் மூலம் அக்காலத்து மனிதர்களது கலை இரசனை,கலைத்திறன்,வாழ்க்கை முறைகள் போன்ற பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

வேட்டையாடுவதைத் தொழிலாகக் கொண்டு வாழ்க்கை நடாத்திய கற்குகைவாசிகள் தாம் கண்ட விலங்குகளை,அவற்றின் அங்க அசைவுகளை தாம் வாழ்ந்த குகைச்சுவர்ப்பரப்புகளிலும் முகடுகளிலும் வரைந்து உள்ளனர்.

பெரும்பாலும் கருப்பொருட்களாகக் கொள்ளப்பட்டவை அன்றாடம் அவர்களது ஆகாரத்தின் பொருட்டு உபயோகித்த எருது,மரை,காட்டுப்பன்றி,காண்டாமிருகம்,மாமத்,பைசான்எருது,குதிரை,போன்ற மிருகங்களின் வடிவங்களும்,சில இடங்களில் மனிதர்களில் பல்வேறு செயற்பாட்டுடன் கூடிய உருவ வெளிப்பாடுகளையும் வலரந்து வர்ணம் தீட்டப்பட்டுள்ளன.

சித்திரங்களில் காணப்படும் விலங்குகள் இயற்கை அமைப்பிலும் அவற்றின் உண்மையான பிரமாணத்திலும்,உயிர்த்தன்மையுடனும்,முப்பரிமாண இயல்புடனும்,அவற்றின் அசைவுகளை வெளிக்காட்டும் மெய்நிலைகளிலும் மிகச்சிறப்பாக வரைந்து காணப்படுகின்றன.
கூரிய ஆயுதங்களை உபயோகித்து(கல்,எலும்பு,கொம்பு)புறவடிவை ஆழமாகத்தோண்டி அவற்றில் மிருக இரத்தம்,கொழுப்பு,மண்வகைகள் ஆகியவற்றை உபயோகித்து தயாரித்துக் கொண்ட வர்ணங்களைக் கொண்டு தீட்டப்பட்டுள்ளது. வெள்ளை,கறுப்பு,இருள் மஞ்சள்,சிவப்பு கலந்த கபிலம் போன்ற வர்ணங்கள் உபயோகிக்கப்பட்டு உள்ளன.கைவிரல்கள்,மிருகமயிர் போன்றவற்றை வர்ணம்தீட்ட உபயோகிக்கப்பட்டு உள்ளதுடன் வாயினால் ஊதியும் வர்ணம் பூசப்பட்டு உள்ளது.

கற்குகையில் வாழ்ந்த மக்கள் இவ்வகையான மிருகங்களின் சித்திரங்களை வரைந்ததற்கு உரிய காரணங்கள் தொடர்பாக விமர்சகர்கள்,ஆய்வாளர்கள் பல்தரப்பட்ட கருத்துக்களை வெளியிட்டு உள்ளனர்.ஆதிமனிதன் மூடநம்பிக்கை காரணமாக தாம் வேட்டையாடிய மிருகங்களின் ஆத்மசாந்தியின் பொருட்டு வரைந்து இருக்கலாம் எனவும்,தமது ஓய்வு நேரத்தை அழகியல் இரசனை உணர்வின் மூலம் கழித்து உள்ளனர் எனவும்,
இவ்வாறு பிராணிகளை வரைவதனால் மேலும் பல விலங்குகள் தமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வரைந்து இருக்கலாம் என பல கருத்துக்கள் நிலவுகின்றன.

வடக்கு ஸ்பானியா,வடக்கு ஆபிரிக்கா,பிரான்ஸ்,ஒஸ்றியா,அஸ்ரேலியா போன்ற இடங்களில் உள்ள குகைகளில் இருந்து புராதன கற்குகை ஓவியங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

ஐரோப்பிய பாடத்திட்டத்தின் உள்ளடக்கம்


பாடத்திட்டத்தின் உள்ளடக்கம்

1. ஐரோப்பிய புராதன குகைச்சிமத்திரம்
2. எகிப்திய நாகரீகத்தில் கலை ஆக்கங்கள்
3. பபிலோனிய நாகரீகத்தில் கலை
4. கிரேக்க கலை
5. உரோமானியக் கலை
6. பைசாந்தியக்கலை
7. மறுமலர்ச்சிக்காலத்துக் கலை
8.  மனப்பதிவு வாதத்தில் - ஒளியியல் வாதம்
9. பிற்பட்ட மனப்பதிவு வாதத்தில் -நிழலியல் வாதம்
10. கனவடிவ வாதம்
11. அரூபவாதம்
12. அகவய யதார்த்த வாதம்
13. கென்றி ஸ்பென்சர் மூர் - சிற்பங்கள்